Chillzee series # 132 starting soon!
Dear friends,
We have Saki's new series starting soon!
The series named 'Manathora mazhaicharai neeyaaginaai' will be an ad-hoc series and will be updated as and when the writer shares her episode.
This is the third part of her 'Ennuyire unakkaga' series!
Here's what the writer has to say about the series:
யாவருக்கும் வணக்கங்கள்!
இதோ நான் மீண்டும் தங்களின் ப்ரியத்தை எனது ஆஸ்தியாக்கிய தங்களின் சகி!
காத்திருப்பும் ஒரு வித சுகம் என்பார்கள்! நீடித்த காத்திருப்பானது சினத்தை தூண்டும் வல்லமை பெற்றது. அதற்கு சாட்சியாக, என்னுயிரே உனக்காக தொடர்கதையின் மூன்றாம் பாகத்தினை எப்போது வெளியிடுவாய் என்று எனை அன்பால் கடிந்த அன்பர்கள் பலர்! அவர்களின் காத்திருப்பும் எல்லை தாண்ட, அதில் சிலரும் தொடர்கதை வெளியாகமல் நம்மிடை உரை என்பது நிகழாது என்றும் என்னை மிரட்டியுள்ளனர். இதோ, அதற்கான எனது விடை!
என்னுயிரே உனக்காக தொடர்கதையின் மூன்றாம் பாகம் தங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்!"என்பது இதன் நாமமாகும்!
சென்ற தொடர்கதையில் நிரஞ்சன் மற்றும் பவித்ராவின் காதலை வெளிக்காட்டும்படி கேட்டனர் சிலர். அவர்களுக்காக இந்த பாகத்தின் பெருமளவு அவர்களின் முதிர்ந்த காதலை காட்டியுள்ளேன். இது சற்று விசித்ரம் பொருந்திய கதையாகவும் இருக்கலாம்!
எந்த மறைமுகமும் இல்லாமல் ஒரு அழகிய காதலை விவரிக்க முயல்கின்றேன். வில்லன் இல்லாமல் இயற்றப்படும் எனது முதல் கதை! எனினும்,முதல் சில அத்தியாயங்களில் வில்லத்தனம் என்ற பெயரில் சில நகைச்சுவைகளும் நிகழும்.
ஆதரவளித்து அரவணைத்துக் கொள்ள விண்ணப்பம்!!இதோ உங்களின் காத்திருப்பினை பூர்த்தி செய்கிறேன்.நன்றி!!!
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Sakil