(Reading time: 2 - 3 minutes)

New series starting soon!

Nallathor veenai seithe

Dear friends,

We have a new series starting in the next few days.

Renugadevi of Anal mele pani thuli fame is all set to start her new series named 'Nallathor veenai seithe'.

Here's the gist of teh story in the writer's pown words:

நம் சில்சி சங்கத்து மக்களே அனல்மேல் பனித்துளிக்கு பிறகு உங்களை யெல்லாம் "நல்லதோர்வீணைசெய்தே"வில் சந்திப்பதில் மிகமிக மகிழ்ச்சி.

நீண்ட நாட்களாக நம்மை சுற்றி நிகழும் பல நிகழ்வுகளின் விளைவாக மனதிற்குள் ஏற்படும் பலவிதமான ஆதங்கங்களுடைய வெளிப்பாடுதான் "நல்லதோர்வீணைசெய்தே ". கிராமபுறங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் மஹாலக்ஷ்மியே வீட்டிற்கு வந்ததாக கூறும் வழக்கம் உண்டு, வீட்டில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் ஒரு ரம்மியமான சூழல் நிலவும். அதுவும் இரு பெண்பிள்ளைகள் என்றால் அவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள் தந்தையிடம் செல்லம் கொஞ்ச போடும் போட்டிகள் என்று எல்லாமே இனிமையானவை. இப்படி வசதி இல்லாத குடும்பமாக இருந்தாலும் தன் இரு பெண்பிள்ளைகளை தேவதைகளாக சீராட்டி வளர்த்த பெற்றோர், அவர்களை விட இந்த உலகில் வேறேதும் பெரிதில்லை என்று எண்ணிய அவர்களின் இரு பெண்கள், இப்படி ஒரு குடும்பம். இந்த பெண்களின் வாழ்வில் நுழையும் புதியவர்களால் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும் சோதனைகளும்தான் இந்ததொடர்.

நம்மைசுற்றி ஏற்படும் பிரச்சனைகளில் சிலசமயம் நம் மனதில் நாம் எடுக்கும் முடிவானது இந்த சமூகசூழ்நிலைகளால் நம்மால் நடைமுறை படுத்த இயலாமல் மனதிலேயே தங்கிவிடும்.  ஆனால் அது போன்ற எந்தவிதிவிலக்கும் நம் கற்பனைஉலகில் இல்லாததால் என் மனதில், என் போன்ற மற்ற பல பெண்களின் மனதில் உருவான, உருவாகும் பல விஷயங்கள் இந்த தொடரில் புகுத்த முயன்றிருக்கிறேன்.

அனல் மேல் பனித்துளிக்கு கொடுத்ததைப்போல இந்த தொடருக்கும் உங்கள் ஆதரவை மற்றும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Renugadevi smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.