(Reading time: 2 - 4 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 06

ழுதுபவர் யாரென்றே தெரியாமல் வெளி வந்த இனிய காதல் - குடும்ப தொடர் இது.

பிந்து வினோத் எழுதிய 'வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா' ஒரு அழகான காதல் கதை.

ந்த கதையில் நம் மனதை கவர்பவர் யார் என்று  ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

இனிமையான மென்மையான கதாநாயகி அருந்ததி, புரிந்துக் கொள்ளும், பொறுமையான கதாநாயகன் ஷிவா, தன் கலகலப்பான குணத்தால் மனதை கவரும் ராதிகா, மருமகளையும் மகளையும் ஒன்றாக பார்க்கும் லக்ஷ்மி, மனைவிக்காக தோப்புக்கரணம் கூட போடும் கௌஷிக் என பலரும் நம் மனதை கவர்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட வித்தியாசமான கருவை கத்தி மேல் நடப்பது போல கொண்டு செல்லாமல், ஜனரஞ்சகமான முறையில் அழகாக கொண்டு சென்றிருப்பது கதாசிரியரின் வெற்றி.

படிக்கும் நம் அனைவரின் முகத்திலும் புன்னகையுடன், அருந்ததி - ஷிவா & ராதிகா - கௌஷிக் மீது அபிமானம் கொள்ள வைப்பது இந்த வீசும் காற்றின் தனி சிறப்பு.

ந்த கதையை பற்றி பிந்து என்ன சொல்கிறார்கள் என்றால்,

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா எழுதிய அனுபவமே அலாதியானது! எழுதும் போது என்னையும் ஆங்காங்கே புன்னகைக்க வைத்த கதை இது.

இந்த கதை எழுத முழு முழு காரணமாக இருந்த சாந்தி மற்றும் வள்ளி இருவருக்கும் என் கோடானு கோடானு நன்றிகள்!

கதை தொடராக வந்த போது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கருத்து பகிர்ந்துக் கொண்டு ஊக்கமளித்த ஒவ்வொரு வாசக தோழி / தோழனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

எதிர்காலத்தில் வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா போன்ற இன்னுமொரு கதையை எழுத முடியுமா என்று தெரியவில்லை! என்னை பொறுத்த வரை இது ஒரு 'once in a while' அனுபவம்.

மிக்க நன்றி தோழமைகளே!

கதையை தொடராக வெளியிட்ட chillzeeக்கும், புத்தகமாக வெளியிட்ட அறிவாலயம் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

- பிந்து வினோத்

 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா.... பூவின் மென்மையும்... மணமும்...!

 

துவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா' பக்கம் சென்று படியுங்கள். 

 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.