Chillzee story Promotions - # 02 - Kadalodu mugil piriyum
Chillzeeயில் 'அஃபிஷியலாக' வெளி வர தொடங்கிய முதல் கதை இது.
முதல் அத்தியாயம் எழுதும் போது admin என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை! இன்று ஏழு வருடங்களுக்கு பின் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது.
கதையின் பெயர் தொடங்கி, சில அத்தியாயங்கள் வரை கூட்டு முயற்சியாக வெளி வந்த இந்த தொடர், வளர்மதியின் உதவியால் இனிய கதையாக தொடர்ந்து நிறைவுபெற்றது.
கதை சுருக்கம்:
கணவன் மனைவியான அருண் - சுமதி, அவர்கள் திருமண வாழ்வில் வீசிய புயலால் பிரிந்து வாழ்கிறார்கள்.
சில வருடங்களுக்கு கழித்து சுமதி பணி புரியும் கல்லூரியின் வாயிலாக இருவரும் சந்திக்க நேர்கிறது. பிரிந்திருந்தாலும் இருவருக்கும் மற்றவர் மீது இருக்கும் அன்பு அப்படியே தான் இருக்கிறது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுமதியுடன் மீண்டும் இணையும் முயற்சியில் இறங்குகிறான் அருண். கணவனின் முயற்சி பிடித்திருந்தாலும் முன்பு அவர்கள் பிரிய காரணமாக இருந்த சம்பவங்களுக்கான விடைகளை தேடுகிறாள் சுமதி.
அவளுக்கு விடை கிடைத்ததா? பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பது மீதி கதை.
கதையில் பிடித்த விஷயங்கள் :
இனிமையான குடும்பக் கதை.
அதிகமான திருப்பங்கள், சுழிவுகள் என்று இல்லாமல் செல்லும் நடை.
காதல், நட்பு, பாசம் என்று அனைத்தையும் கலந்து தந்திருக்கும் தொனி.
கடலோடு முகில் பிரியும்.... பிரிவோம் சந்திப்போம்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'கடலோடு முகில் பிரியும்' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}