Chillzee story Promotions - # 03 - Konjam periya kuzhanthaigalukkana kathai ithu
பெரியவர்களான நம்முள் இருக்கும் சிறு வயது நினைவுகளை தட்டி எழுப்பிய அம்புலி மாமா ரக கதை இது.
தங்கமணி ஸ்வாமிநாதன் எழுதிய இந்த கதை Chillzeeயில் வெளியான 97வது தொடர்கதை.
கதை சுருக்கம்:
ஒரு நாட்டின் இளவரசிக்கு வினோத பிரச்சனை. அவளுக்கு திருமணம் முடிந்த முதல் நாளே மணமகன் இறந்து விடுகிறான்.
இதே கதை தொடர்ந்துக் கொண்டு இருக்க, என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார் ராஜா.
இளவரசியின் துன்பத்தை துடைக்க எங்கிருந்தோ ஒரு அந்நியன், குதிரையில் வந்து சேர்கிறான்.
இளவரசியை மணந்துக் கொண்டு உயிர் பிரியாமல் இருந்து, நடந்த மர்மங்களுக்கான காரணத்தை கண்டு பிடிக்கிறான்.
இளவரசியின் வாழ்வில் இருக்கும் துயரம் துடைத்த இந்த வீரனிடமும் மர்மம் இருக்கிறது.
யார் அவன்? எதற்காக அங்கே வந்தான்? அவனுக்கும் ராஜாவிற்கும் என்ன உறவு? என்ற கேள்விகளை கொண்டு வந்து, விடையும் தருகிறது கதை.
கதையில் பிடித்த விஷயங்கள் :
விறுவிறுப்பான நடை. குறிப்பாக கதையின் பிற்பகுதியில் வரும் ஃபிளாஷ்பேக் வெகு விறுவிறுப்பாக செல்கிறது.
பெரியவர்களினுள் இருக்கும் சிறு வயது நினைவுகளை தட்டி எழுப்பும் கதை அமைப்பு.
அந்த 'fantasy' உலகத்திற்கே நம்மை அழைத்து சென்று விடும் கதை .
கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது.... பெரியவர்களுக்கான ஸ்பெஷல் அம்புலிமாமா...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}