Chillzee story Promotions - # 04 - Puyalukku pin
Chillzeeயில் வெளி வந்த இரண்டாவது தொடர் இது. பிந்து வினோத் அறிமுகமான கதையும் கூட!
கதை சுருக்கம்:
கணவன், குழந்தையே உலகம் என்று குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்துடன் இருக்கும் சாந்தியின் வாழ்வில், அவள் கணவன் அரவிந்தின் விபத்து ரூபத்தில் புயல் வீசுகிறது.
கணவன் மருத்துவமனையில் இருக்கும் போது அவன் அரும்பாடு பட்டு உழைத்து உயர்த்திய கம்பெனி சுந்தர் எனும் ஒரு வில்லனின் வஞ்சகத்தால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. கம்பெனி மீது தனி பிரியம் இல்லா விட்டாலும் கணவனிற்காக சுந்தரை சந்தித்து பிரச்சனையை தீர்க்க முயலுகிறாள் சாந்தி. ஆனால் சுந்தர் கம்பெனியை பிரச்சனையில் இருந்து விடுவிக்க சாந்தியிடம் தவறான நடத்தையை எதிர்பார்க்கிறான்.
சீறி எழும் சாந்தி, சுந்தரிடம் இருந்து எப்படியாவது கம்பெனியை மீட்டு எடுத்தே தீருவேன் என முடிவு செய்து, திட்டமிட்டு காய் நகர்த்துகிறாள்.
அவள் எதிர்பார்த்தது போல் எல்லாம் நடந்ததா? அரவிந்திற்கு என்னவாயிற்று என்பது மீதி கதை.
கதையில் பிடித்த விஷயங்கள் :
கதையின் முக்கிய கரு 'பெண்ணியம்' என்றாலும் கதாநாயகியை வீராங்கனையாக காட்டாமல் நம்மில் ஒருத்தியாக சாதாரணமானவளாக காட்டி இருப்பது நன்று.
அரவிந்த் - சாந்தி இடையே இருக்கும் அன்னியோன்யம் - இன்பத்திலும், துன்பத்திலும் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், அழகு!
ஒரு சாமான்ய பெண்ணும் நினைத்தால் எந்த ஒரு தடையையும் தாண்ட முடியும் என்று ஊக்கமூட்டும் / நம்பிக்கை கொடுக்கும் கதையின் கருத்தும் சிறப்பு.
புயலுக்கு பின்.... பூ ஒன்று புயலானது...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'புயலுக்கு பின்' பக்கம் சென்று படியுங்கள்.
{kunena_discuss:788}