Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 02. 30 நிமிட எக் புலாவ் - நந்தினி
சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.
தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
முட்டை - 3
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 7 பல்
(அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 ஸ்பூன்)
பிரியாணி இல்லை - 1
கிராம்பு - 3
பட்டை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை சிறியதாக நறுக்கி கொள்ளவும்
- பச்சை மிளகாயை கீறி வைக்கவும்
- இஞ்சி பூண்டை சற்றே நசுக்கி வைக்கவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து, சூடானவுடன் நெய் சேர்க்கவும்.
- நெய் சூடானவுடன் பிரியாணி இலை, கிராம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்
- பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சற்றே வதங்கியவுடன், இஞ்சி - பூண்டை சேர்த்து வதக்கவும்.
- பின், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- தக்காளி கொஞ்சம் வெந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்குமாறு வதக்கவும்.
- முட்டை நன்கு கலந்து வெந்த உடன், நான்கு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- தண்ணீர் கொதித்த உடன், அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இரண்டு விசில் வைத்து விட்டு அடுப்பில் இருந்து எடுத்து வைக்கவும்.
- மேலே சிறிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இழைகள் தூவி சூடான சுவையான எக் புலாவை பரிமாறவும்.
இது கொஞ்சம் டிரையாக bland டேஸ்ட்டுடன் இருக்கும். எனவே ஏதாவது குழம்புடன் உண்ணலாம். இல்லை காரமான மிக்சர் போன்ற சைடிஷுடனும் உண்ணலாம்.