Cooking Tips # 10 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
கீரை சமைத்த பின் நிறம் மாறாமல் இருக்க, கீரையை நறுக்கிய உடனேயே உப்பு போட்டு வேக வைக்கக் வேண்டும்.
எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது தாளிக்கும் போதே எலுமிச்சை சாறை பிழியக் கூடாது. தாளித்து முடித்து, சாதத்தில் தான் எலுமிச்சை சாரை பிழிய வேண்டும். இல்லையென்றால் கசப்பு சுவை இருக்கும்.
மசால் வடை செய்யும் போது, ஊறிய பருப்பை அரைக்கும் முன் ஒரு பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர் அரைத்த பருப்புடன் சேர்த்து வடை செய்தால், மொரு மொரு கர கர வடை கிடைக்கும்.
வாழைப்பூவை நறுக்கிய பிறகு, ஒரு நாள் இரவு மோரில் ஊற விட்டு பொரியல் அல்லது வடை செய்தால் கசக்காது.
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது சாதமும், பருப்பும் நாகு குழைந்து வெந்த பின்பு தான் வெல்லம் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே வெல்லம் சேர்த்தால் அரிசியும், பருப்பும் சரியாக வேகாது.
பஜ்ஜி செய்யும் போது, காய்கறிகளை நறுக்கி தயார் செய்து விட்டு, எண்ணெயையும் காய வைத்து விட்டு, கடைசியாக மாவு பிசைந்து உடனே பஜ்ஜி செய்தால் எண்ணெய் அதிகமாக குடிக்காது.
{kunena_discuss:794}