(Reading time: 1 - 2 minutes)

சிரிங்க சிரிங்க! - கிருத்திகா

fun

சோமு மனைவி : சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..

போலீஸ் : உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?

சோமு மனைவி : தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர் தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.

போலீஸ் : ?????

 


நான் தலைல பூ வெச்சுக்கிட்டு போனா மானேஜர் திட்டுவாரு..!

அநியாயமா இருக்கே…!

அப்புறம் அவரு வாங்கின பூவை எங்கு வைப்பாரு..!

 


" யோவ்மாமா உங்க பொண்ணு கோபம் வந்து எங்கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சிட்டா !"

"அதிர்ஷ்டக்காரப் புள்ள நீ ! அவங்கம்மா கோபம் வந்தா கத்திய எடுத்து வெரட்டுவா "

 


காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?

காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?

 


என்னது இது…செருப்புகளை எல்லாம் சுவரிலே ஆணி ஆடிச்சி மாட்டி வச்சிருக்கீங்க?

சண்டை நேரத்தில, கீழே குனிஞ்சு எடுக்க சிரமமா இருப்பதால் என் மனைவிதான் இப்படி மாட்டி வச்சிருக்கா..!

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.