வாய் விட்டு சிரிங்க!!! - கிருத்திகா
மனைவி: டிபன் வேணுமா ??
கணவன் : சாய்ஸ் இருக்கா??
மனைவி: ரெண்டு இருக்கு???
கணவன்: என்னென்ன ??
மனைவி : வேணுமா?......... வேண்டாமா????
ஏண்டா, எல்லாப் பாடத்திலேயும் பெயிலாயிட்டியே உங்க அம்மா அடிக்க மாட்டாங்களா?
ஐ அஸ்கு பிஸ்கு...............அடி வாங்குரதுக்காகவேதானே எங்கப்பா இருக்காரு!!
புருஷன் பொண்டாட்டிக்குள்ளே எந்தவித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது…!
அப்ப விடு! நாளைக்கு என்னோட சின்ன வீட்டையெல்லாம் உனக்கு காண்பிச்சுடறேன்!
பால் விலை ஏற்றாமல் வியாபாரம் பணறீங்கே, கஷ்டமா இல்லையா?
மாட்டின் சொந்தக்காரர் கண்களில் அகப்படாம இருக்கறதுதான் கஷ்டமா இருக்கு..!
ஒரு வீட்டில் பெண் பார்க்கப் போயிருந்தார்கள். மறுநாள் எதிர் வீட்டு நபர் பையனிடம் கேட்டார்;
உனக்குப் பெண் பிடித்திருக்கிறதா?
இல்லை..!
ஏன்?
பெண்ணை விட அவள் தங்கைதான் எனக்குப் பிடித்திருக்கிறது..!
அவளிடம் சம்மதம் கேட்க வேண்டியதுதானே..?
கேட்டேன்
என்ன சொன்னாள்?
எனக்கு மாப்பிள்ளையை விட மாப்பிள்ளையின் அப்பாவைத்தான் பிடித்திருகிறது எனச் சொல்லி விட்டாள்..!
வங்கி ஊழியர் : நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருக்கறத பார்த்தேன். உங்களுக்கு ஏதோ விவரம் தேவைன்னு நினைக்கிறேன்.என்னால முடிஞ்சா உதவுறேன். சொல்லுங்க?
சோமு : அதோ அங்க நீலக் கலர் ஜீன்சும், ஷர்ட்டும் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு இருக்காங்களே. அவங்களோட வீட்டு முகவரி வாங்கித் தர முடியுமா?
லவ் பண்ற பெண்ணுக்கிட்டே காதலை சொல்ல,மண்டியிட்டு ரோஜாப்பூ கொடுத்தது தப்பா போச்சு..!
ஏன் என்னாச்சு?
என் உச்சந்தலையிலே இருக்கற வழுக்கையைப் பார்த்துட்டா…!