ஜோக்ஸ் - நாங்கலாம் பேசியே கலாய்ப்போம்ல :-) - அனுஷா
நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா
நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா
நண்பர் 2: ?????
அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????
மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : ?????
கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
அமைச்சர் :?????
{kunena_discuss:747}