(Reading time: 1 - 2 minutes)

ஆரோக்கிய குறிப்பு # 9 - சோம்பு கஷாயம்

பெண்கள் சில பேருக்கு அந்த மூன்று நாட்களில் முதல் இரண்டு நாட்கள் கடுமையான வயிற்று வலி இருக்கும்.இதனால் பள்ளி,கல்லூரி,அலுவலகம் செல்லும் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்.

ஸாரிடான்,பெரால்கன் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்துவர்.

அதற்கு பதிலாக" சோம்பு கஷாயத்தை"க் குடித்து சுகமாகுங்களேன்.

சாதாரணமாக வீட்டிலேயே இருக்கும் சோம்பு என்கிற பெருஞ்சீரகத்தை ஒரு நாலு ஸ்பூன் எடுங்கள்.

காய் வதக்கும் பாத்திரத்தில் சோம்பைப் போட்டு அது லேசாகக் கருக ஆரம்பிக்கும் வரை வறுங்கள்.

கொஞ்சம் கருத்ததும் அதில் மூன்று டம்ளர் தண்ணீர் விடுங்கள்.அது முக்கால் டம்ளராக சுண்டும் வரைகொதிக்க விடுங்கள்.பிறகு அதனை வடிக்கட்டி அரை ஸ்பூன் நெய் விட்டு(தேவையெனில் கால் ஸ்பூன்ஜீனி போடலாம்)பொறுக்கும் சூட்டில் குடியுங்கள்.பத்தே நிமிடத்தில் வயிற்றுவலி பை..பை..

சொல்லி விடும்.செய்வது மிகஎளிது.பக்க விளைவு ஏதும்மில்லாதது.கட்டாயம் வலி நின்றுவிடும்.

கிராமத்துக் கை வைத்தியம் இது.

கஷாயமா?என்று முகத்தைச் சுளிக்க வேண்டாம்...கசப்பாக இருக்காது..உடலுக்கு நல்லது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.