(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 06 - பணம் பெண் பாசம் – ஜாவர் சீதாராமன்

panamPenPasam

க்ரபாணி பல நிறுவனங்களை ஆளும் பணக்காரன். ஆனால் இன்னும் இன்னும் பணம் வேண்டும் என அலையும் பேராசைக்காரன். அவன் மனித உருவில் நடமாடும் அரக்கன் என எல்லோராலும் தூற்றப் படுகிறான்.

சக்ரபாணி பணக்காரனாக இருந்தாலும் அவனுடைய சொந்த வாழ்க்கை அத்தனை சிறப்பாக இல்லை. அவனின் மனைவி லக்ஷ்மி பைத்தியம் பிடித்து இருக்கிகிறாள். சக்ரபாணி ஒரு வினாடி கூட தூங்க முடியாத வினோத நோயை கொண்டிருக்கிறான்.

எல்லோராலும் வெறுக்கப் படும் சக்ரபாணியை விரும்பும் ஒரே ஜீவன் அவனின் மகள் பாலா மட்டுமே.

பாலா இளவரசி போன்ற வாழ்க்கையை வாழ்கிறாள். அவள் கேட்பது அனைத்தும் அவளுக்கு கிடைக்கிறது.

ஒரு நாள் எதேச்சையாக தன் அம்மா லக்ஷ்மியின் தந்தையை சந்திக்கும் பாலாவின் வாழ்க்கை தலைகீழாக மாறி போகிறது.

தாத்தாவின் மூலமே அவளின் அம்மாவின் அண்ணன் மகன் மோகன் மற்றும் அவனின் தாயையும் சந்திக்கிறாள் பாலா. பாலாவின் மனம் மோகனின் மீது காதல் கொள்கிறது.

தன் பேத்திக்கு சக்ரபாணியின் நிஜ முகத்தை காட்ட விரும்பும் தாத்தா பல வருடங்களுக்கு முன் நடந்த கதையை சொல்கிறார்.

தன் தந்தை தனக்கு வழிகாட்டியாக இருந்தவரை ஏமாற்றியதும், மோகனின் அப்பா சந்திரனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததும் தெரிந்து அதிர்ந்து போகிறாள் பாலா.

தன் தந்தையின் தவறான செயல்களால் அவருக்கு தீங்கு வந்து விடக் கூடாது என்று முடிவு செய்து தந்தையின் செயல்களுக்கு பிராயசித்தம் செய்ய முடிவு செய்கிறாள்.

 

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

வீட்டை விட்டு வெளியேறி, தந்தை முன்பு ஏமாற்றியவர்களின் வாழ்க்கையை சீர் செய்ய முயற்சிக்கிறாள். அவளின் செயல்கள் சக்ரபாணியின் வாழ்வில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வருகிறது. லஷ்மியின் நிலைமையிலும் முன்னேற்றம் தெரிகிறது. இதனால் மனம் மகிழும் பாலா தன்னுடைய முயற்சியை தொடர்கிறாள். இறுதியில் தந்தையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதுடன் தந்தையின் மனதை மாற்றுவதிலும் வெற்றிப் பெறுகிறாள்.*************************** End of Spoiler *********************************** 

காதல் கலந்த ஜனரஞ்சகமான குடும்பக் கதை.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.