தாய்ப் பால் தர மறுக்கும் பெண்கள்!!!
தாய்ப் பால் கொடுக்க விரும்பாத பெண்கள் பற்றிய ஆய்வில் இங்கிலாந்த் நாட்டு பெண்கள் முதல் இடத்தை பெற்றுள்ளார்கள்.
இங்கிலாந்தில் 200 தாய்மார்களில் ஒருவர் தான் 12 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு பால் புகட்டுகின்றனர். மற்றவர்கள் குறைந்த மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.
தமது இளமை தோற்றம் அப்படியே நீடித்திருக்கவும், அழகு மாறாமல் இருக்கவும் இந்த பெண்கள் தாய்ப் பால் கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் ஆய்வில் சொல்கிறார்கள்.
இங்கிலாந்திற்கு அடுத்த படியாக சவூதி அரேபியாவும், டென்மார்க்கும் இருக்கின்றன.
ஜெர்மனி 23 சதவிகிதமும், அமெரிக்கா 27 சதவிகிதமும் ஆய்வில் பெற்றுள்ளன.
இந்திய பெண்கள் பற்றி கேட்கிறீர்களா?
92 சதவிகித தாய்மார்கள் 12 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு பால் புகட்டுவது நம் நாட்டில் தான்!!!!!
சுவாரசியமான விஷயம் என்ன என்றால், இந்த ஆய்வு நடந்ததும் இங்கிலாந்தில் தான்! இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக் கழகத்தில் தான் இந்த ஆய்வு நடத்தப் பட்டது.