ஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 04 - தங்கமணி சுவாமினாதன்
ஈரேழு பதினான்கு உலகம் என்று அடிக்கடி கேள்விப்பட்டிருபோம்.அவை யாவை அறிவோமா?
1.நாம் இருப்பது 1.பூலோகம்.
இதற்கு மேலே---2.புவ.3.ஸ்வ.4.மஹ.5.ஜன.6.தப.7.ஸத்ய.
பூலோகதிற்குக் கீழே--1.அதளம்.2.விதளம்.3.ஸூதளம்.4.ரஸாதளம்.5.தளாதளம்.6.மஹாதளம்.
7.பாதாளம்.மொத்தம் 14 உலகங்கள்.
ஏழு கடல்கள் (ஸமுத்திரம்)
1.லவண ஸமுத்திரம்.2.இக்ஷூ ஸமுத்திரம்.3.ஸூரா ஸமுத்திரம்.4.ஸர்பி ஸமுத்திரம்.
5.ததி ஸமுத்திரம்.6.க்ஷீர ஸமுத்திரம்.7.சுத்தோதக ஸமுத்திரம். இவற்றுள் இன்றிருப்பது லவண சமுத்திரம் மட்டுமே.(லவணம்-உப்பு).
ஏழு தீவுகள்--(த்வீபம்)
1.ஜம்பு த்வீபம்..2.ப்லக்ஷத்வீபம்.3.குசத்வீபம்.4.க்ரௌஞ்சத்வீபம்.5.சாரதத்வீபம்.6.சால்மலித்வீபம். 7.புஷ்கரத்வீபம்.
ஏழு மலைகளைப் பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை.ஸூ மேரு,இமாலயம் என்று மட்டுமே உள்ளது.
ஏழு சிரஞ்சீவிகள்--
1.அச்வத்தாமா.2.வ்யாஸர்.3.ஹனுமான்.4.விபீஷணன்.5.பலி.6.க்ருபர்.7.பரசுராமர்.
பதினெட்டு புராணங்கள்:-
.பிரம்ம புராணம்.2.பத்ம புராணம்.3.விஷ்ணு புராணம்.4.சிவ புராணம்.5.நாரத புராணம்.6.அக்னி புராணம்.7.மார்கண்டேய புராணம்.8.பவிஷ்ய புராணம்.9.லிங்க புராணம்.10.வராக புராணம்.
11.ஸ்கந்த புராணம்.12வாமன புராணம்.13.கூர்ம புராணம்.14.மச்ச புராணம்.15.கருட புராணம்.
16.பிரும்மாண்ட புராணம்.17.பிரம்ம வைவர்தக புராணம்.18.ஸ்ரீமத் பாகவத புராணம்.
யுகங்கள்
யுகங்கள் நான்கு அவை;-1.கிருத யுகம்.2.திரேதா யுகம்.3.துவாபர யுகம்.4.கலி யுகம்.
1.கிருத யுகத்தில் பகவானின் அவதாரம்;- மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிம்ஹம்,வாமனம்.
2.திரேதா யுகத்தில்-- இராமன்,பரசுராமன்.
3.துவாபர யுகத்தில்---பலராமன்,கிருஷ்ணன்.
4.கலி யுகம்---கல்கி(நிகழவிருப்பது)
வினைகள்
வினைகள் எத்த்னை வகைப் படும்;- மூன்று வகைப் படும்.
1.ஸஞ்சிதம்.2.பிராரப்தம்.3.ஆகாமி.
ஸஞ்சிதம்;- பல பிறப்புக்களில் செய்துள்ளநல்வினை,தீவினைகள் ஸஞ்சிதம் எனப்படும்.
பிராரப்தம்;- ஸஞ்சிதத்திலிருந்து அதாவது முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியதிலிருந்து கிடைக்கும் பலன்களால் இப்பிறவியில் அனுபவிப்பது.
ஆகாமி;- இப்பிறவியில் செய்யப்போகின்ற நல் வினை,தீவினைகள்.
இறந்த பின் மனிதன் எங்கு செல்கின்றான்..?
இனி வரும் குறிப்புகளில் பார்க்கலாமா..? நன்றி
ஆன்மிகம் வளரும்.....