நீயும் நானும் - 01 - நட்புடன்
நான்:
வாழ்க்கை பாதை எங்கும்
நம் நட்பின் மலர் வாசம்!!!
நீ:
அன்பெனும் உணர்வில்
என்றும் புன்னகை மலரும்
நம் நட்பின் பயணத்தில்
நான்:
தொடர் ரயில் பயணம் போல
தொடர்ந்து போகும் வாழ்வில்
களைப்பாறும் நிழலாய்
துணை வருவது நட்பல்லவா!!!
நீ :
நிழலாய் இருந்த போதும்
நிஜமான உறவல்லவா நட்பு
நான்:
நிஜமாய் நிழலும் விட்டு போகும் ஒருநாள்
நிலையாய் ஒளியாய் நிற்பது நட்பு மட்டுமே.
நீ :
உயிர் பயணத்தின் இறுதி வரை
உறுதியாய் இந்த உணர்வின் நேசம்
நான்:
வாழ்வின் பயணம் முடிந்தும்
வாழும் நம் நட்பு
நினைவில் என்றென்றும்
நீ:
நட்பென்னும் வானில்
சூரியன் மறைவதில்லை
சந்திரன் தேய்வதில்லை
நான்:
விண்மீன்கள் ஜொலி ஜொலிக்க
வானவில்லும் அழிவதில்லை
பாட்டுக்குப் பாட்டு எடுத்து எசப் பாட்டு பாடி வந்தோம்.. "நீயும் நானும்" நட்பில் பூத்த இரு மலர்கள் புதுமை என்ற பெயரில் கிறுக்கி இருக்கிறோம். உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.