(Reading time: 1 - 2 minutes)

நீயும் நானும் - 01 - நட்புடன்

நான்:    

வாழ்க்கை பாதை எங்கும்

நம் நட்பின் மலர் வாசம்!!!

 

நீ:       

அன்பெனும் உணர்வில்

என்றும் புன்னகை  மலரும்

நம் நட்பின் பயணத்தில்

 

நான்:    

தொடர் ரயில் பயணம் போல

தொடர்ந்து போகும் வாழ்வில்

களைப்பாறும் நிழலாய்

துணை வருவது நட்பல்லவா!!!

 

நீ :     

நிழலாய் இருந்த போதும்

நிஜமான உறவல்லவா நட்பு

 

நான்:   

நிஜமாய் நிழலும் விட்டு போகும் ஒருநாள்

நிலையாய் ஒளியாய் நிற்பது நட்பு மட்டுமே.

 

நீ :     

உயிர் பயணத்தின் இறுதி வரை

உறுதியாய்  இந்த உணர்வின் நேசம்

 

நான்:   

வாழ்வின் பயணம் முடிந்தும்

வாழும் நம் நட்பு

நினைவில் என்றென்றும்

 

நீ:      

நட்பென்னும் வானில்

சூரியன் மறைவதில்லை

சந்திரன் தேய்வதில்லை

 

நான்:   

விண்மீன்கள் ஜொலி ஜொலிக்க

வானவில்லும் அழிவதில்லை

 

பாட்டுக்குப் பாட்டு எடுத்து எசப் பாட்டு பாடி வந்தோம்.. "நீயும் நானும்" நட்பில் பூத்த  இரு மலர்கள் புதுமை என்ற பெயரில் கிறுக்கி இருக்கிறோம்.  உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Neeyum naanum - 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.