இந்தியத்தாயின் இதயக்குமுறலும் தன் மகனுக்கிட்ட கட்டளையும்
பாரதத்தாய் பாதத்தில் படுத்துறங்க பாய் விரித்து
படுத்தேன் நான், கண்மணியில் இமை சேர்த்து
சொட்டு சொட்டாய் நீர்த்துளிகள் ஏன் மேல் விழ
என்னவென்று நான் பார்த்தேன் நித்திரை களைய
பார்த்தவுடன் தெரிந்தது பாரதத்தாய் அழுவது
மனம் துடித்திட, புரிந்தது விழுவது கண்ணீர் சரம் என்று,
என்ன தாயே உனக்கு குறை? ஏன் இந்த கண்ணீர் அலை?
உனக்கு பாதகங்கள் நிகழ்ந்ததோ? அதை பார்த்த மனம் சிதைந்ததே!
அதற்க்குத் தாய்...
படுத்துறங்க வந்த மகனே, பாரதத்தின் செல்ல மகனே!
என்னவென்று நான் சொல்வேன் என் துயரை? எப்படி சொல்வேன்?
பகுத்தறிவற்ற பாவிகளின் கொடிய செயல் தொடர்கிறது
கொடி போல் என் மீது சுற்றி வளைந்து படர்கிறது
பட்ட துன்பம் போதாதோ அன்னியரின் ஆட்சியிலே
இன்னும் பட வேண்டுமோ பிரிவினையின் சூழ்ச்சியிலே
ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஒன்றை வாழுது காட்டினிலே
ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏனோ மனசாட்சி இல்லை
ஒன்றாய் வாழ தெரியாத? கடவுள் ஒன்றே புரியாதா?
சாதி மத பேதமற்ற கருத்து அவனில் நிலவாதா?
பார் போற்றும் பாரதம் என்று பார்ப்போர்கள் பாராட்ட
பயனுள்ள செயல் செய்து நல்ல பெயர் வாங்காமல்
புவி தகர்த்து புகை மூட்டும் ஆயுதங்களை ஏந்துவதோ?
அன்னியரின் தூண்டுதல் ஆட்டி படிக்குது அவர்களையாடா
அதை ஏற்று அவன் தருவது உன் தாய்க்கு பெரும் தொல்லையடா
இனி ஒரு பொழுதும் பொறுக்க மாட்டேன், பொங்கி எழுந்து புறப்படு நீ!
சோம்பலை முறித்துவிட்டு, துரோகிகளை அழித்திடு நீ!
உன் இந்தியத்தாயின் இதயத்தில் நிம்மதியை விதைத்திடு நீ!
இமயம் முதல் குமரி வரை அமைதிப் பயிரை வளர்த்திடு நீ!
எல்லை தாண்டிய தீயவனின் தொல்லை இனி இல்லை என்று
இந்திய மக்களின் இதயத்தில் அமைதி நிலவ வழி வகுத்திடு நீ!
பொறுமைக்கும் எல்லை உண்டு, நெஞ்சை நிமிர்த்தி புறப்படு நீ!
போக்ரான் அணுகுண்டாய் தீயவனை அளித்திடு நீஸ்
உடனே மகன்..
புரிந்து கொண்டேன் தாயே! கண்கள் விழித்துக் கொண்டேன் தாயே!
என் இந்திய தேசத்தில் இனி எவன் ஒருவனின் தீய செயலையும்
அனுமதிக்க மாட்டேன் தாயே!
இந்தியா என் உடைமை! இந்தியாவைக் காப்பதே என் கடமை!
புறப்படுகிறேன் தாயே! புறப்பட்டு விட்டேன் தாயே!
வாழ்க பாரதம்! வளர்க இந்தியா! வெல்லட்டும் இந்திய மக்கள்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!