களவு போகத்தான் செய்கிறது மனம்!!!
கையருகே நட்சத்திரம் என்றும்
குடத்தில் கடல் என்றும்
குவளையில் நதியென்றும்
கைப்பிடிக்குள் வானம் என்றும்
வளையலில் வானவில் என்றும்
தூக்கக் கலக்கக் கனவுகள் விடாமல்
நிஜங்களைத் துரத்தத்தான் செய்கின்றன.....
நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............
இருந்தாலும்
குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!
என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!