(Reading time: 1 minute)

 

கதை சொல்லவும்...கேட்கவும்....!! 

 

தேவதைக் கதைகளிலிருந்து
பறக்கும் கம்பளத்தையும்
வைரப் பொக்கிஷப் பேழைகளையும் 
சிறகு முளைத்த குழந்தைகளையும்
பேசும் கிளிகளையும்
சிரிக்கும் தவளைகளையும்
காணாமல் போன செருப்பையும்
பூசணிக்காய் ரதத்தையும்
ஏழு மலைகளையும்
ஏழு கடல்களையும் தாண்டி
ஒளித்து வைத்திருக்கும்
இளவரசனின் உயிரையும்
சுருட்டி எடுத்துக் கொண்டாயிற்று
கதை சொல்ல......

வீடியோ விளையாட்டுகளிலும்
தொலைக் காட்சியிலும்
கணினிக் கொண்டாட்டங்களிலும்
மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான்
மீட்டு எடுக்க முடியவில்லை
கதை கேட்க........  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.