உன்னிடம் சொல்ல தெரியவில்லை
குரல் கேட்க யேங்கினோம்
நாணம் தலை தட்டியது!
மனம் விட்டு பேச முயன்றோம்
வார்த்தை முட்டியது!
ஒருவரை ஒருவர்
மறைந்திருந்து பார்க்கும் தருணம்
நம் கண் பார்த்து கொண்டாலோ
சிறு வெக்கம் பூத்த சிரிப்போடு
மனம் தங்கினாலும்
கால்கள் ஓடியது!
உலகத்திற்கே சொல்ல தயக்கம் இல்லை
ஆனால் என் உரியவனாக போகிற
உன்னிடம் சொல்ல தெரியவில்லை!