விழிகளின் அருகினில்...
விழிகளின் அருகினில் தொலைத்திடும் மனது
கனவினில் அவனோடு சேர்ந்திடும் பொழுது
தாய் மடியில் அந்த சேய் பெற்ற சுகத்தை
அவன் மடியில் அவள் பெற்றாள் அந்த நொடியை
காலம் தோறும் அவன் கண் இமைகளுள்
வசப்பட்டு இருக்கும் இயலாமை
அதில் கூட சுகம் காணும் பேதையடா
அவள் மனதில் உனை இன்றி வேர் இல்லையடா