ஆம் நாங்கள் இந்தியர்கள்!!!
எல்லையில் பாதுகாப்பிற்கு
ஆள் நிற்கவைத்து விட்டு
மறைமுகமாய் கதவை திறப்போம்!!
மிருகத்தை தெய்வமென்போம்
சக மனிதனை சாதி -சமயமென
சொல்லி கொன்று குவிப்போம்!!
கற்பழித்தவனை விட்டுவிடுவோம்
கலைஞனை கண்ணீர் சிந்த வைப்போம்!!
தவறுக்கு விருந்து வைப்போம்
நல்லதை கவனிக்க மாட்டோம்
படித்து பட்டம் வாங்கி - பறந்து விடுவோம்..
உற்றவன் அழுதால் அது கண்ணீர்
மற்றவன் அது வெறும் நீர்..
ஆம் நாங்கள் தான் இந்தியர்கள்!!!