(Reading time: 1 minute)

 

ஆம் நாங்கள் இந்தியர்கள்!!!

 

எல்லையில் பாதுகாப்பிற்கு 

ஆள் நிற்கவைத்து விட்டு 

மறைமுகமாய் கதவை திறப்போம்!!

மிருகத்தை தெய்வமென்போம் 

சக மனிதனை சாதி -சமயமென 

சொல்லி கொன்று குவிப்போம்!!

கற்பழித்தவனை விட்டுவிடுவோம் 

கலைஞனை கண்ணீர் சிந்த வைப்போம்!!

தவறுக்கு விருந்து வைப்போம்

நல்லதை கவனிக்க மாட்டோம் 

படித்து பட்டம் வாங்கி - பறந்து விடுவோம்..

உற்றவன் அழுதால் அது கண்ணீர் 

மற்றவன் அது வெறும் நீர்..

ஆம் நாங்கள் தான் இந்தியர்கள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.