(Reading time: 1 - 2 minutes)

!!! கோவிலுக்கு காவற்படை !!! 

கோவிலுக்கு போக வேண்டும் என்று 

குழூவாக கிளம்புவார்கள் வரிசையில் வாஞ்சையோடு 

தரிசனத்திற்காக நிற்பார்கள் !

ஒருவருக்கொருவர் வக்காலத்து வாங்கியும் எகத்தாளம் போட்டும் 

பட்டிமன்றம் நடத்துவார்கள் !

கருவறைக்கு அருகில் சென்று தம் குறைகளை கொட்டி தீர்த்தால் 

போதுமென்று நினைப்பார்கள் !

அங்கே சென்றவுடன் அண்டசராசரங்கள் ஆளும் ஆண்டவனை 

அறுபது நொடிகூட பார்க்கமுடியவில்லையே

என்று தவிப்பார்கள் !

கோவில் நிர்வாகம் இப்படித்தான் என்று வசைப்பாடி 

வீடு திரும்புவார்கள் ! 

எவருக்கு எட்டுகிறது ? 

ஆலயம் செல்லவேண்டும் என்று நினைத்தவுடன்

உலக விஷயங்களை அலசி ஆராயாமல் ஆண்டவன்

நினைப்பில் ஐக்கியம்மாக வேண்டுமென்று ?

ஹ்ம்ம்... அக்து அறிந்தால் ஏன் கோவிலுக்கு(ஆலய தரிசனத்திற்கு)

காவற்படை  வைத்து கட்டுப்பாடு !!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.