!!! கோவிலுக்கு காவற்படை !!!
கோவிலுக்கு போக வேண்டும் என்று
குழூவாக கிளம்புவார்கள் வரிசையில் வாஞ்சையோடு
தரிசனத்திற்காக நிற்பார்கள் !
ஒருவருக்கொருவர் வக்காலத்து வாங்கியும் எகத்தாளம் போட்டும்
பட்டிமன்றம் நடத்துவார்கள் !
கருவறைக்கு அருகில் சென்று தம் குறைகளை கொட்டி தீர்த்தால்
போதுமென்று நினைப்பார்கள் !
அங்கே சென்றவுடன் அண்டசராசரங்கள் ஆளும் ஆண்டவனை
அறுபது நொடிகூட பார்க்கமுடியவில்லையே
என்று தவிப்பார்கள் !
கோவில் நிர்வாகம் இப்படித்தான் என்று வசைப்பாடி
வீடு திரும்புவார்கள் !
எவருக்கு எட்டுகிறது ?
ஆலயம் செல்லவேண்டும் என்று நினைத்தவுடன்
உலக விஷயங்களை அலசி ஆராயாமல் ஆண்டவன்
நினைப்பில் ஐக்கியம்மாக வேண்டுமென்று ?
ஹ்ம்ம்... அக்து அறிந்தால் ஏன் கோவிலுக்கு(ஆலய தரிசனத்திற்கு)
காவற்படை வைத்து கட்டுப்பாடு !!!!