(Reading time: 1 - 2 minutes)

சுதந்திரத்தின் மெய்ப்பொருள் காண்பது அறிவு 

சோதனைகள் பல கடந்து வேதனைகள் பல பொருத்து

இன்னுயிர்கள் பல இம்மன்னுக்கு அளித்து

பெற்றொம் நாம்  சுதந்திரம்! அடைந்தோம் அளவற்ற ஆனந்தம் அன்று !

முழுவதும் சாதித்தோம் என நினைந்து எக்களித்தது இந்திய மண் ?!

வெள்ளையனுக்கு வந்தனம் போய்  கொள்ளையனுக்கு (நம் மண்ணின் மைந்தர்கள்) வந்தனம் ஆனது !

சுகவாசி ஆக விடுவேனா என்று சவால் விடுக்கிறது விலைவாசி ஒருபுறம் !

செலவுகளை பற்றி கவலையே இல்லாத அரசியல்வாதி போன்ற பலர் மறுபுறம் !

பல அடுக்குமாடி தொழில்நுட்ப கல்லலூரிகள் ஒருபுறம் !

கஞ்சிக்காக ஏங்கும் குழந்தை தொழிளாளர்கள் மறுபுறம் ! 

தொலைநோக்கு பார்வையுடன் தகவல் தொழில்நுட்பத்தின் இமாலய வளர்ச்சி ஒருபுறம் !

தொலைந்து போகும் வாழ்கையை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் சாமானியண் மறுபுறம் !

நதிநீர் பங்கீட்டு பிரச்சனை, மின்சார பகிர்வு பிரச்சனை

அண்டை நாடுகளுடன் அல்ல அண்டை மாநிலங்ளுடன் !

தேசியமும் தெய்வீகமும் மண்டையில் புகட்ட ஒளவையின் இலக்கியங்கள் போன்ற 

பொக்கிழசங்களை நாம் தொலைத்து விட்டோம் !

நம் தேசத்தை சேதமின்றி காப்போம் !

‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்ற மகாகவி பாரதி வாக்கின் மெய்ப்பொருள் காண்போம் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.