பண்டிகை கொண்டாட்டம் - கஜலக்ஷ்மி
பண்டிககையை கொண்டாட
கூடினோம் சொந்த ஊரில்
சொந்தங்களையும் சேர்த்து கொண்டாட !
அடுக்களைக்குள் அமர்க்களமாய்
பெண்டிர்கள் யாவரும் களம் இறங்கினோம்
பலவகை படையள்கள் செய்து முடிக்க !
பாயாசம் செய்ய -
நெய்யில் வதக்கி தேங்காயை இருதியில்
அலங்கரிக்களாம் என்றால் ஒருத்தி !
தேங்காயை கீரிபோட்டு முதலிலேயே
சேர்க்க வேண்டும் என்றால் மற்றொருத்தி !
பருப்பு பாயாசம் பார்த்து கொண்டிருந்தது எல்லோருயும்
எப்படிதான் என்னை செய்வார்களோ என்பது போல?!
அதர்கிடையில் கூடத்தில் தொலைக்காட்ச்சியின்
நிகழ்ச்சிகளை இரசித்து கொண்டுருந்த
கொழுந்தன், என் மனைவி பாயாசம் செய்யும்முறையே
எனக்கு மகிழ்ச்சி என்றான் நடுவர் தீர்ப்பு போல!!
அதற்கு சமையல் இராணிகள், அவர் அவர்களின்
வாயை வலது இலது திசையாக லாகுவாக அசைத்தார்கள் -
மனைவிக்கு வக்காளத்து வாங்கும் கொழுந்தனை நோக்கி !
போதும் போதும் உங்கள் அனைவரின் அள்ப்பறை -
இது மாமியரின் எல்லோருக்குமான பொதுவான அதட்டல்
கொழுகட்டைக்கு வேர்த்து விட்டதா என்று பாருங்கள்
வியர்காமல் சொகுசாக ஓய்வு எடுத்து கொண்டே !
இனிதே அனைத்து பலகாரங்களைம்
செய்து முடித்தோம் பந்தங்கள் அனைவரும் |
படையளிட்டோம் ! பந்தியில் பரிமாரினோம் !!!