யார் குற்றம்
அறியா வயதில் அரவணைப்பை தேடிய போது
பெற்றவள் அருகில் இல்லை,
பருவ வயதில் தோள் கொடுக்க தோழனாய்
தந்தையின் அரவணைப்பு கிடைக்கவில்லை,
அன்புக்கு ஏங்கிய நேரத்தில் நண்பர்களால்
திசை மாறிய வாழ்க்கையை சீர்படுத்த முடியவில்லை,
காலம் கடந்து நினைத்து பார்க்கையில்
யாரை குற்றம் சொல்லுவது !