அந்தி சாயும் நேரம்
அந்தி சாயும் நேரத்தில்
சில்லென்று காற்று வீச,
பூக்களும் இலைகளும் நடனம் ஆட,
சின்ன பெரிய மழை துளிகளால்
பூமியின் உஸ்ணத்தை குறைக்க,
சூரியனோ,
நிலவை காணத கோபத்தில்,
மேகத்தில் பல வர்ணங்களால் சிவந்து இருக்க,
நிலவின் நினைவோ ,
சூரியனின் வெட்கத்தில் சிவந்த மேகங்களை ரசித்து,
இளம் தென்றலுடன் ஓர் புன்னகை சிந்தியது!