(Reading time: 1 minute)

பெண்மை

தென்றலையும் புயலையும் 
அனுதினம் கடந்து செல்லுவதிர்க்கு 
மனதிடம் கொண்டவள்....
 
அவளின் தைரியத்தின் சான்றாய் 
விண்வெளிக்கு சென்றவள்....
 
உலக அரங்கத்தில் 
வர்த்தகத்திலும் விளையாட்டிலும் 
தனக்கென்று முத்திரையை பதித்தவள்....
 
அரசாங்கமே தோற்று போகும் 
இவளின் வீட்டு நிதி சேமிப்பு திட்டத்தில்....!
 
தூக்கி மிதிக்கும் ஆண்களை 
துச்சமாக நினைத்து 
அனுதினம் போராடியவள்...
 
எல்லை காக்கும் வீரனை போல் 
கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் 
நயவஞ்சகரிடம் போராடி வெற்றி பெரும் 
 
மங்கையாய் இருப்பாள்....!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.