அதிசயமே...!
பூக்களின் மொழி எனக்கு தெரியாது
ஆனால்,
நான் பேசுவதற்கு இவர்கள் தலை அசைத்து
பதில் சொல்லுவது அதிசயமே...!
தனியாய் நடக்கையிலே,
தென்றல் என்னை தழுவி சென்று
உன்னுடன் நானும் வருகிறேன்
என உணர்த்துவது அதிசயமே....!
உள்ளத்தில் வலியை யாரிடம் கூறுவது
என தெரியாமல் வானத்தை பார்க்கையில்,
உனக்கு நான் இருக்கிறேன்
என சிரிக்கும் நிலவு அதிசயமே....!