என் முதல் " ஹீரோ " - மது
தவழும் வயதில் மடியில் ஏந்தினான்
துள்ளும் பருவத்தில் உப்பு மூட்டை சுமந்தான்.
வாசலிலே தினம் காத்திருப்பான் - எனை
வீதி உலாவிற்கு கூட்டிச் சென்றிடுவான்.
காலில் சக்கரம் கட்டி சுழன்றிடுவான் - எவரும்
குறுக்கிட்டால் எச்சரிக்கை செய்து விலக்கிடுவான்.
காற்றில் மிதக்கும் அனுபவம் தந்திடுவான்
கருத்தாய் எனை இல்லம் சேர்த்திடுவான்
கார்மேக வண்ணன் எல்லோரையும் கவர்ந்திடுவான் - என்
கூட்டுச் சிறார்களின் பொறாமையை தூண்டிடுவான்.
இன்றும்,
இளமை மாறாத புதுப் பொலிவுடன் திகழ்கின்றான்
இருப்பினும் எனக்காக விருப்ப ஓய்வை ரசிக்கின்றான்..
என் முதல் " ஹீரோ"!!! {அப்பாவின் “hero” சைக்கிள்}