(Reading time: 1 minute)

பெண்மை - கவிதை போட்டி - 01 - முருகலக்ஷ்மி.M

இவள் 

அன்புக்கு அடிமை

இவள் 

பண்பின் இலக்கணம்

என அடிமைப்படுத்தப்படுகிறாள்!

இவள்

போற்றப்படவேண்டும்

இவள் 

பாதுகாக்கப்படவேண்டும்

என சிறையிலடைக்கப்படுபவள்!

இவளின் இன்றைய நிலை

இவளுக்கே கேள்விக்குறி??

தன்னிறைவு அடைந்தவளா?!

தாகத்தில் இருப்பவளா?!

இன்றும் காண்கிறோம் இவளை

அகிலம் ஆள்பவளாய்

தங்கம் வெல்பவளாய்

பட்டம் பெறுபவளாய்

இருந்தும் களங்கப்படுத்தப்படுகிறாள்

உடலாலும் மனதாலும்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.