பெண்மை - கவிதை போட்டி - 17 - சகி
ஆதி அந்தம் இரண்டும் கடந்தவள் நீ....!!!
அழகாய் அகிலம் தன்னை தாங்குபவள் நீ...!!
தன்னலமின்றி யாவருக்கும் பேதமின்றி அன்பை அளிப்பவளக நீ...!!
ஆச்சரியம் தான் உன்னால் எப்படி முடிகிறது?????
அனைவரிடத்திலும் ஆச்சரியகுறியாய் மட்டுமல்ல....
கேள்விக்குறியாய் விளங்குகிறாய்???
செந்தமிழ் சொற்கள் கொண்டு கவிதையை எழுத எனக்கு சக்தி இல்லை...
மன்னிப்பை எழுதுகிறேன்.
அதிகாரத்தை செலுத்தியப் போதும் அன்பை மட்டுமே வழங்கினாய்....
நீ கண்ணீர் சிந்தி அனைவரது கண்ணீரையும் துடைத்தாய்!!!!
போதும் பெண்ணே...!!!!!!!
அகத்தில் நிரம்பி வழிந்த கர்வத்தை ஒழித்து மண்டியிடுகிறேன்.
இனி பாவ பூமியில் என்னை உழல விடாமல் மோட்சம் கொடு!!!!!
உன் தாய்மையை பாரட்ட வாய்ப்பை கொடு!!!!!
-இங்ஙனம் சமூகத்தின் சார்பில் ஒரு அற்ப கவிஞன்....