அவனும் நானும் - 07 - என் பகலிலும் நட்சத்திரங்கள் நீ..!! - ப்ரியா
அந்தி மலர்ந்தால்
அங்கே நின்று ஒளிரும் ..
பகலவன் ஒளி வாங்கி
நித்தம் அழகுறும் நிலவின் முன்னே
தன்னொளி வீசி
தன் பக்கம் இழுக்கும்...
அண்ணாந்து நான் காண்கையில்
கண் சிம்மிட்டி அழைக்கும்...
சோர்ந்து நான் இருக்கையில்
உருவங்கள் காட்டி புன்னகை செய்யும்..
இயற்கை இளவரசி அவளின்
முத்து பவளம் வைரம் அங்கே
சிந்தி சிதறி பரவி இருப்பதை
போலொரு நினைவை எனக்களிக்கும்...
பிரிந்து சென்ற சிலரின் வடிவாய்
தினம் தோறும் நான் காணும்..
இரவின் ரம்யம் அதை
அலங்கரிக்க பிறந்த
அந்த நட்சத்திரங்களை போல...
பகலிலும் என்னுள் நீங்காமல்
ஒளி வீசும் நட்சத்திரங்களடா..!!!!
எனக்கே உரிய உன் காதல் கலைகள்..!!
{kunena_discuss:779}