அவனும் நானும் - 13 - பிரிந்திருந்தாலும் பிரியம் நீ..!!! - ப்ரியா
சுவாசங்கள் தொட முடியா
தூரத்தில் நீ தொடர்கிறாய்..
தொடர்பிருந்தும் உன்னை
தொட ஏங்கும் தென்றலாய்
நான் மருகும் நொடிகளில்
மதியெங்கும் படர்கிறாய்..
பகல் முழுதும் பயணம்
தொடர வேண்டும்
இரவின் விளிம்பை
தொட்டுவிடும் நொடிக்காக..!!
இருட்டும் நொடியில்
இமை வலி இதயம் நுழையும்
உனக்காகவே காத்திருப்பு
ஒவ்வொரு நாளும் என் கைபேசியின்
ஒளியலையில் என் வருகைப்பதிவு..
சோர்ந்திருக்கும் முகத்தில்
எனக்கான புன்னகையை தேக்கி நிற்கும்
உன் விழிகளுக்குள் பாயும்
என் காதலை கண்டு
கணநேரமும் பிரிந்திருக்க முடியாமல்
சடுதியில் நித்திரை தேவியை
அழைத்து கண் மூடுகிறேன்..
உன் கரம் பிடிக்கும் காலம்வரை
கனவினில் உன் மடியோடு
காலம் கழித்திடுவேன்..!!
நிகழ்வதனில் நீ பிரிந்திருந்தாலும்..
என்னை எப்போதும் பிரியாதிருக்கும்
பிரியமடா உன் காதல்..!!
{kunena_discuss:779}