எனது கடிதம்..உனது வாழ்விற்காக - ஆதிரா
என்ன தவறு செய்தேன் நான்
என் வம்சத்தை நீ அழிக்க..?
உன்னை சுவாசிக்க வைத்தேன்
தூய காற்றை கொடுத்து
உனது வாழ்விடமானேன்
எனது பாகங்களை செதுக்கி
உன்னை களைப்பாற செய்தேன்
அந்த கதிரவனையும் தடுத்து
உனது வாழ்வின் ஆதாரமானேன்
நீ உண்ணும் உணவாகி
மருந்தும் ஆனேன் உனக்காக..
பிணியிலிருந்து உன்னை காக்க
மழையையும் பொலிவித்தேன்
உனது தாகத்தை தீர்க்க
கொடுத்ததெல்லாம் நான் அல்லவோ ?
பின் ஏன் எனை அழிக்கிறாய் ?
தற்பெருமை கொள்ளவில்லை நான்
இப்போதும் எண்ணுகிறேன் உனக்காக
உன்னை காக்கவே ..!
மண் சரிவில் மாண்டதும் நீ தானே..!
வெப்பத்தால் தவிப்பதும் நீ தானே..!
தண்ணீரை தேடுவதும் நீ தானே..!
வறுமையில் வாடுவதும் நீ தானே..!
புரிந்து கொள் மனிதா நீ!
காலம் கடக்கவில்லை இப்போதும்
என்னை அழித்துக்கொள் உனக்காக - அதில்
ஒரு துன்பமும் இல்லை எனக்கு !
உயிர் பிரிவேன் உனக்காக
இன்பம் ஒன்றே..உன்னை எண்ணி
வேண்டுகிறேன் உனக்காக உன்னிடமே- எனது
இறுதி ஆசையும் இது மட்டுமே..!
அழிக்காதே மானிடா என் வம்சத்தை
எனது நிறைவும் இதுவன்றோ..!
அழிக்காதே மானிடா என் வம்சத்தை
உனது எதிர்காலத்தை..!
இப்படிக்கு..என்றும் அன்புடன்
உனது மரமாகிய நான் !