என் உயிர் அப்பா .. - ஆதிரா
தவம் இருக்கிறேன் உனக்காக
உன்னை காண ..!
கண்கள் காத்திருக்கின்றன உனக்காக
ஏக்கத்துடன்.. இமை மூடாமல் ..!
என் மழலை முதல் குமரி வரை
உடனிருந்தாய் நீயே ..!
அன்பை கொடுத்து அரவணைத்தாய்
கண்டிப்பை கொடுத்து வழி நடத்தினாய்..!!
சொல்லாமல் காணாமல் போனாய் - அதன்
காரணம் தான் என்னவோ ..?
யாரிடம் கேட்பேன் இனி
யாரை அழைப்பேன் இனி
உன்னை அழைத்தது போல் ..!
உருகுகிறேன் மருகுகிறேன் நான்
உனக்காக மட்டும் - என்
கண்ணீர் பதில் சொல்கிறது ..
நீ என்னுள் தான் உள்ளாய்
என் உயிர் அப்பா ..!!!