(Reading time: 1 minute)

மண(ன)வாழ்க்கை

Mana vazhkkai

மணநாள்,மனம் நிறைந்த நாளாய் காண மங்கையவள் காத்திருந்தாள்!

ஆனால் இப்பொழுதோ,

அவள் வாழ்நாளின் அத்யாயம் எழுதாமல் முடிந்துவிடுமோ என்ற அய்யப்படுகிறாள்!!

தான் காணும் கனவில் பெய்த மழையில்,

குடை பிடிப்பான் அவள் கணவன் என்று நெகிழ்ந்திருந்தாள்!

ஆனால் இப்பொழுதோ,

தன் கனவிலேயும் வானம் வரண்டிடுமோ என்று வாடுகிறாள்!!

தன் தனிமையை தகர்க்க கைபிடிப்பான் என்று எதிர்பார்த்திருந்தது அவள் விழி!!

ஆனால் ,

    அவன் கைபிடித்தும் தனிமை அவளை வாட்டுகிறதே இதுதானோ அவள் விதி!!!!!!....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.