தோழி - பத்மாவதி
பேச பேச திகட்டாமல்
ஒரு படுக்கையில் உறங்கி ,
சில சில்லரைகள் கொண்டு
ஒரு தட்டில் உணவு அருந்தி ,
விண்ணை தொடும் முயர்ச்சியிலே-
ஊஞ்சல் ஆடி ,
மகிழ்ந்திருந்த காலம் சென்றதுவே தோழி !!!....
காலத்தின் கோலத்தை உன்னிடமே கற்றுக்கொண்டேன்டி - தோழி..
திசைகள் வேறு நாம் சென்றாலும்
நம் இரு கண்களின் பார்வை ஒன்று தான் - நட்பு!!!....
முன்போ, பேச பேச கதைகள் தொடரும்...
இன்றோ,உன் தோளிலே சாயும் அந்நிமிடம்
பல நூரு கதைகள் பேசிடும் தோழி!!!
தாமரை இலையில் ஒட்டத நீர் நீ என்றாலும்
என்னை மூழ்காமல் மிதக்க செய்வாயடி தோழி!!!!!!!!!!!!