(Reading time: 1 minute)

அதிர்ஷ்டசாலி - சுதாகர்

அத்து மீறா நம்
காதலை பற்றி
என் கணவரிடம்
சொல்லிக்கொண்டு
இருககிறேனடா....

யார் அவர் என்று
கேட்ட என் கணவரிடம்
உன் நினைவாக
என்னிடம் இருந்த
வாழ்த்து அட்டைகளையும்
நீ வாங்கிக் கொடுத்த
சாக்லேட் காகிதத்தையும்

நீ அடிக்கடி கொடுத்த
ரோஜாவின் காய்ந்த
இதழ்களையும்
ஆசையாக என் புத்தகத்தில்
நீ வைத்த மயில்
இறகுகளையும்

நீ ஆசையாக வாங்கிக்
கொடுத்து இன்று
ஊமையாக உறங்கும்
பாதக் கொலுசுவையும்
காண்பித்தேன்.

எங்கே அவர் என்று
கேட்ட அவரிடம்
உன் முகவரி தெரியாமல்
கலங்கினேன்.

என்னை அனைத்து படி
சொன்னார் நான்
அதிர்ஷ்டசாலி என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.