கணவன் மனைவி - சுதாகர்
சின்ன சண்டை
வெகு நேர மெளனம்
அவனை தழுவிய மேகம்
அவளையும் தழுவியது
இருந்தும் மெளனம்.
கெஞ்சிப் பார்த்தான்
கொஞ்சிப் பார்த்தான்
கிள்ளிப் பார்த்தான்
அவள் முறைத்துப் பார்த்தாள்.
பொறுமை இழந்தவன்
விலக முயன்றான்
கட்டிக் கொண்டு
கண் சிமிட்டினாள்.
{kunena_discuss:779}