(Reading time: 1 minute)

அன்னை - கயல்விழி

அன்னை என்ற தீபத்தை  
 
ஏற்றி வைத்தது யாரம்மா ......
 
அன்பு என்ற வார்த்தையை  
 
உணர வைத்தது நீயம்மா ........
 
சொந்தஙகள் பந்தங்கள் 
 
அது நூறானாலும் .......
 
நம் அன்னையின் அன்புக்கு 
 
ஈடு இணை ஏதம்மா..........

கருவிலே எமை சுமந்தாய் 

ஈரைந்து மாதங்கள்....... 
 
உயிராக வளர்த்திடுவாய் 
 
நீ பெற்ற செல்வத்தை....... 
 
அம் மழலையின் ஒற்றை வார்த்தை...... அதில் அவள் மறந்திடுவாள் 
 
இப் பூவுலகை....... 
 
அம்மா.......
 
என்ற தேனமுத அழைப்பினிலே........
 
கரு சுமந்த எல்லா அன்னையர்க்கும் இக் கவி சமர்ப்பணம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.