பரமனின் ஏக்கம் - அனு.ஆர்
உன் பாதை என்னுடையதை
சந்திக்க தொடங்கியபொழுதே
சூரிய சந்திரனாகின என் கண்கள்
உன் பாதம் எங்காயினும்
என் பார்வையில்தான் நீ
நுனி முதல் அடி வரை
நேசம் மாத்திரமே நான்
பூமியை சூழும் வளி போல்
உன்னை சூழும் என் நேசம்
தவிக்க செய்கிறது என்னை
வா,
வந்தென்னை
சூழ்ந்துகொள்
சிதராதிருப்பாய் நீ
தவிப்படங்கும் எனக்கு
உன் நோக்கிய
என் பயண பாதையில்
முட்களும் ஆணிகளும்
என்னுடைமை.
உன்னகான பொற் கிரீடம்
என் உதிரத்தால் கழுவப்பட்டிருப்பினும்
பத்திரமயிருக்கிறது என்னுள்
வந்துவிடு அங்கே.