நம்பமுடிகின்றது அவனை! - அனு.ஆர்
முதன் முறை
புகைபடம் கண்டபோது
பெரிதாக ஒன்றுமில்லை.
வரதட்சணை என்பது
பெருங்குற்றம்
என்ற என் முதலஞ்சலுக்கு
நிச்சயமாக என்ற
ஒற்றை வார்த்தை
பதில்.
நிச்சயத்திற்கு பிறகு
தினசரி சந்திப்பு.
சிறு முத்தம்
சிலீர் தொடல்
எதுவுமின்றி
பத்தியம் காத்தான்
பதி ஆகும் வரை.
நடுஇரவில்
நங்கையுடன்
வந்தாலும்
நம்பமுடிகின்றது
அவனை.
பகிர்ந்து கொள்ளும்
உறவிலோ
நட்பிலோ
பரஸ்பர
நம்பிக்கை என்பது
இலவச இணைப்பு
அல்ல,
சுயசம்பாத்யம்!