நான் இறைவனை சந்தித்தேன் - ஜான்சி
ஒரு கவிதை நான் புனைந்திட பலமுறை சிந்தித்தேன்.
சிந்தித்தேன் சிந்தித்தேன் , இறைவனை சந்தித்தேன்.
மனிதர்கள் இறைவனின் சாயல் என அறிந்ததால்,
எனை போன்ற பிற மனிதருள் இறைவனை சந்தித்தேன்.
அன்பும் நட்பும் அவருடன் கொண்டிட்டேன்.
நானும் இறைவனின் படைப்பு ஆதலால்
என்னில் நானே இறைவனை சந்தித்தேன்.
என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட எண்ணிட்டேன்.
வண்ணமிகு மலர்ச் சோலையில் இறைவனை சந்தித்தேன்.
நறுமணம் கமழும் மலர்களின் வடிவங்களை வியந்திட்டேன்
அவர் எத்துணை அழகுருவாய் இருப்பார் என சிந்தித்தேன்.
குழந்தைகளின் துள்ளல்கள், மழலையில் இறைவனை சந்தித்தேன்,
தூய்மையும் உண்மையும் அவர்களில் கண்டிட்டேன்.
குழந்தை மனம் கொண்டு வாழவே எண்ணிட்டேன்
மலைகளில், சரிவுகளில் இறைவனை சந்தித்தேன்,
இயற்கை வளங்களில் அவர் மாண்பை கண்டிட்டேன்
உலகெங்கும் வியாபிக்கும் அவரையே தொழுது நின்றேன்.
நான் இறைவனை சந்தித்தேன்.