ஷ்..ஷ். - ஜான்சி
ஷ்.ஷ்..அமைதியாக பேசுங்கள்,
நாகரிகம் பேணுங்கள் என்று நாள் முழுதும் கடந்தாலும்.
எங்கிருந்தோ எழும் ஆரவாரப் பேச்சின் சப்தம் ஞாபகப்படுத்தி விடுகின்றது.
வீட்டிற்கு வருகையிலெல்லாம் கலகலக்கச் செய்யும் மாமா,
விருந்திற்கு அழைத்து விட்டு வெளி வாயில் வரை வந்து வாயார வரவேற்கும் அத்தை,
முற்றத்தில் கால் நீட்டி ஊர் கதைகள் பேசி ஆரவாரமாய் சிரிக்கும் பாட்டி
எனும் பல (லேட்)டாகிப் போன வாடாத நினைவுகளை.
{kunena_discuss:779}