11. காதல் என்பது - ஜான்சி
காட்டாற்றுப் போல சீறிப் பாயும் வரையில்லா கோபம் உன்னது,
அதை நெறிப்படுத்தும் கருவியாய் நான்.
உந்தன் கோபத்தின் சீற்றம் கரைக் கடக்கும் வேளைகளில்,
ராணுவ சேனையாக கருதி உன் நண்பர்கள், எனைத்தேடி உன் முன் நிறுத்தி விடுகிறார்கள்.
நீயும் உடனே 'நிறுத்தி' விடுகின்றாய்.(!)
எந்தன் ஓர் துளிக் கண்ணீர் முன்
உந்தன் காட்டாற்று வெள்ளம் கரைக்கட்டி தேங்கி நின்று விடும் அதிசயமே
உந்தன் பெயர் தான் காதலா!
{kunena_discuss:779}