12. காதல் என்பது - ஜான்சி
இன்னும் ஞாபகமிருக்கிறது எனக்கு
காதல் சொல்லாக் காலங்களில்,
இருந்த ஓர் விதமான பரபரப்பு.
நாள்முழுதும் உன் நினைவுகளில்
லப் டப் என இசையாய் ஒலிக்கும் என் இதயம்.
உனைக் கண்ட நொடி முதல்
லபோ திபோ எனக் கதறித் துடிக்கும்.
நெற்றியில் பெருகும் வேர்வை,
வார்த்தையில் குளறல்,
நிற்க தடுமாறும் கால்கள்,
நடுக்கம் மறைக்கும் கைகள்,
ஆனால் கண்கள் மட்டும் ஆசையாய் உன் முக வடிவை வருடிச் செல்லும்.
ஆர்வமாய் உன் தோற்றத்தை அள்ளித் தின்னும்.
இதுதான் காதலா...!
{kunena_discuss:779}