14. காதல் என்பது - ஜான்சி
சந்திக்கும் வேளைகளில் எல்லாம் மலர்க் கொத்தை கொடுத்து,
என் மனம் கொத்திச் செல்கின்றாய் நீ.
மணம் கொண்ட, மலர் கொண்டு
மனம் மகிழ்ந்தே நான் நின்றாலும்,
நீ மலர் தந்து என் மனதோடு சொன்ன செய்தி என்னவோ??
என்னை மலரென்று உன் மனதில் பதித்தாயோ?!
உன் மனதை மலரெனவே தாங்கிடவும் உரைத்தாயோ?!
இம்மலர் போல் நம் வாழ்வும் மலரும் என்றாயோ?!
மலர்ச் சூடி மணம் புரியும் நாள் விரைவில் என்பாயோ?!
புதுமலர்க் கொண்டு எனைக் காண நீ வரும் நாள் வரைக்கும்,
உன் நினைவென்னும் மலர்தன்னை சரம் கோர்த்துக் காத்திருப்பேன்.
இதுதான் காதலா!
{kunena_discuss:779}