(Reading time: 2 - 3 minutes)

தண்டனை?! - ஜான்சி

I love you

வளவளவென்ற உன் பேச்சின் நடுவே,

என் மீதான நேசத்தை கேட்டறிய முற்படும் போதெல்லாம்,

பேச்சை திசைமாற்றும் உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?.

சின்ன சின்ன என் பரிசுகளையும் ஆவலாய் வாங்கி புன்னகையாய் மிளிரும் உன் முகத்திற்க்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

உனக்கான எந்தன் நேசத்தை பகிரும் போதெல்லாம்,

உதட்டை சுழித்து கண்ணை அலட்சியமாய் திருப்பும் உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?.

கோபத்தில் விலகி போகும் போது ,
வழி மறித்து குழந்தையாய் சிரிக்கும் உனக்கு
என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

தொடர்பு கொள்ள இயலா எந்தன் வேலைப் பளு நாட்களின் காரணமாய்,

கோபத்தில் பேசாமல் என்னைத் தவிர்க்கும் உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

துன்பம் வருகையில் உலகம் மறந்து என்னை மட்டும் நினைக்கும்,
என் துன்பம் காணவும் உள்ளம் பதைக்கும் உனக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

நெருங்குகையில் விலக்கும் ,விலகுகையில்  கரம் பற்றும் உன் விரல்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம்?

எத்தனை துன்பங்கள் தந்தாய் என்றெண்ணி "எண்ணி"
அத்தனை முத்தம் பதிப்பேன்.

நெற்றிச் சுட்டி, கம்மல் , வளை அனைத்தும் முத்தத்தால் அலங்கரிப்பேன்.

ஆயுள் சிறையெடுத்து இவ்விதமே நானும் உனை தினம் தினம் தண்டிப்பேன்.

இந்த கவிதை திவ்யா கேட்டுக் கொண்டதற்காக பேராண்மை கதைக்காக எழுதியது. எழுத தூண்டுதல் கொடுத்ததற்காக நன்றிகள் திவ்யா

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.