(Reading time: 1 minute)

01. எழுந்து வா - ஜான்சி

Keep going

கனமற்றப் பொருளன்று , 
கனம் மிக்க பொருட்களை
புவியீர்ப்பு விசை ஈர்ப்பது
இயற்கையின் நியதி.

நீயும் தரை மட்டும் விழுந்ததும் , 
காயத்தில் துடித்ததும்,
கண்ணீரை உகுத்ததும் 
வாழ்வினில் தவிர்த்திட இயலாதொரு பகுதி.

இயற்கையின் ஆற்றலை வென்றிடும் மானிடா,

உன் வாழ்வின் துன்பங்கள் அவ்வளவு பளுவாடா,

உன்னை நீ நம்பு
நிமிர்ந்து நீ நின்று
எழுந்து வா தோழா!

Poem 02

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.