01. எழுந்து வா - ஜான்சி
கனமற்றப் பொருளன்று ,
கனம் மிக்க பொருட்களை
புவியீர்ப்பு விசை ஈர்ப்பது
இயற்கையின் நியதி.
நீயும் தரை மட்டும் விழுந்ததும் ,
காயத்தில் துடித்ததும்,
கண்ணீரை உகுத்ததும்
வாழ்வினில் தவிர்த்திட இயலாதொரு பகுதி.
இயற்கையின் ஆற்றலை வென்றிடும் மானிடா,
உன் வாழ்வின் துன்பங்கள் அவ்வளவு பளுவாடா,
உன்னை நீ நம்பு
நிமிர்ந்து நீ நின்று
எழுந்து வா தோழா!
{kunena_discuss:779}